பதிவு செய்த நாள்
24
மார்
2017
12:03
ராமேஸ்வரம், ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுட்டெரிக்கும் வெயிலில் இளைப்பாற நிழல் வசதியின்றி தவிக்கின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர் களும், சனி, ஞாயிறு நாட்ளில் 30 ஆயிரம் பேரும் வருகின்றனர். தற்போது தீவுப்பகுதியான ராமேஸ்வரத்தில் சராசரியாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் உள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ரதவீதி, சன்னிதி தெரு வழியாக அக்னி தீர்த்த கடலில் நீராடி கோயிலுக்கு செல்கின்றனர். ரதவீதி, சன்னிதி தெரு, அக்னி தீர்த்தம் கடலில் நீராடி கோயிலுக்கு வர 500 மீட்டர் துாரம் பக்தர்கள் நடந்து செல் லும் நிலை உள்ளது. ஆனால், சுட்டெரிக்கும் வெயிலில் வயதான பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் நடக்க முடியாமல், ஒதுங்கி நிற்க நிழற்குடை, பந்தல்கள் ஏதும் இல்லாமல் தவிக்கின்றனர். சில சமயம் மயங்கி விழுகின்றனர்.
ஒவ்வொரு கோடை காலத்தி லும் பக்தர்கள் இதுபோல் சிரமப்படுவது தொடர்கிறது. உலக அலவில் பிரசித்திபெற்ற ஆன்மிக தலமான ராமநாத சுவாமி கோயிலை அடிப்படை யாகக் கொண்டு மத்திய அரசு ராமேஸ்வரத்தை ஸ்மார்ட் சிட்டியாக அறிவித்துள்ளது. ஆனால், இங்கு வரும் பக்தர்களு க்கு கோயில் நிர்வாகம் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளையாவது செய்ய வேண்டும். குறிப்பாக கோடை காலங் களில் சுட்டெரிக்கும் வெயிலில் பக்தர்களை பாதுகாக்க நிழல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி, ரதவீதியில் ஏராளமான குடையில் பந்தல் அமைத்தது பக்தர்களிடம் வரவேற்பு பெற்றது. அதுபோல் சுட்டெரிக்கும் வெயிலில் ராமேஸ்வரம் பக்தர்களை பாது காக்க கிழக்கு ரதவீதி, சன்னிதி தெருவில் பிரமாண்ட பந்தல் அமைக்க, கோயில் நிர்வாகம் முன்வர வேண்டும், என இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.