ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் திருக்கல்யாண விழா: ஏப்.1ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2017 06:03
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் விழா ஏப்ரல் 1ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பங்குனி உத்திரநாளில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டு விழா ஏப்ரல் ஒன்றாம் தேதி காலை 7:35 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 13நாள் நடக்கும் விழாவில் தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளுகின்றனர்.
செப்புத்தேர்: ஏப்ரல் 9 காலை 7:00 மணிக்கு செப்புத்தேர் வடம்பிடித்தல்,காலை 10:00 மணிக்கு திருமாங்கல்யம் பெறுதல், மதியம் 3 :00 மணிக்கு ரெங்கமன்னார் வீதி புறப்பாடும், 4:00 மணிக்கு ஆண்டாள் அங்கமணிகளுடன் புறப்பட்டு மாலை மாற்றுதல், இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. பின்னர் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுகிறது. ஏப்ரல் 13 மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் புஷ்பயாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.