திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மார் 2017 06:03
திருச்சி: திருச்சி, திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தேர் திருவிழா மார்16ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று( மார்.24ல்) நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து தேரை வடம் பிடித்தனர். 25ம் தேதி சப்தாவரணம் திருவீதி ஏற்பாடும், 26ல் ஆளும் பல்லக்கில் திருவீதி புறப்பாடும் நடைபெற உள்ளது.