நினைத்த காரியத்தை வெற்றியடைய செய்யும் அஞ்சுக்கோட்டை ஆனிமுத்துக்கருப்பர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2017 11:03
திருவாடானை: நினைத்த காரியத்தை வெற்றியடைய செய்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஆனிமுத்துகருப்பர், திருவாடானை அருகே அஞ்சுக்கோட்டையில் எழுந்தருளி உள்ளார். கோயிலின் முன்பு இரண்டு வெள்ளைக் குதிரைகளில் கருப்பர் அரிவாளுடன் பவனி வருவது போன்ற பெரிய சிலைகள் உள்ளன. குதிரைகளில் கருப்பனை வணங்கிவிட்டு கோயில் உள்ளே சென்றால் கருவறையில் நின்ற நிலையில் கருப்பர் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தை வலம் வரும்போது இருளாயிஅம்மன், சின்னக்கருப்பர், பெரியகருப்பர் உட்பட 21 சுவாமிகள் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றனர். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயிலில் மூலவரான கருப்பர் பக்தர்களுக்கு கேட்கும் வரத்தை அருளி, கிராமத்தை காவல் காக்கும் காவல் தெய்வமாக விளங்குகிறார். இது குறித்து பூஜாரி ராமநாதன் கூறுகையில், சித்திரை மாதத்தில் பவுர்ணமி அன்று திருவிழா நடத்தப்படும். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள். மாலையில் மஞ்சுவிரட்டு நடைபெறும். அன்று இரவு 1008 திருவிளக்குபூஜை நடைபெறும். காவல் தெய்வம் கருப்பனை மனதார வேண்டினால் கேட்கும் வரத்தை கொடுத்து பக்தர்களின் குறைகளை போக்கி வருகிறார். கிராம மக்களை காக்கும் காவல் தெய்வமாகவும் உள்ளார், என்றார்.