பதிவு செய்த நாள்
25
மார்
2017
11:03
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகேயுள்ள சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவிலில், நேற்று வெள்ளிக்கிழமையை ஒட்டி, மாரியம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டது. சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவில் பழமை வாய்ந்தது. வாரத்தில், செவ்வாய், வெள்ளி மற்றும் மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்து வருகின்றன. அதன்படி நேற்று வெள்ளிக்கிழமையை ஒட்டி, காலை, 7:30 மணிக்கு சுயம்பாக உள்ள மாரியம்மனுக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர் உட்பட, 30 வகையான பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. சுயம்பு மாரியம்மனுக்கு பின்புறம் உள்ள மாரியம்மன் சிலைக்கு மஞ்சள் அலங்கராம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.