பதிவு செய்த நாள்
27
மார்
2017
10:03
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தென்னலுார் கிராமத்தில், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்த, நான்கு கல்வெட்டுகளும், கற்சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா தென்னலுார் கிராமத்தில், திருச்சி, ஈ.ெவ.ரா., கலைக்கல்லுாரியின் மாணவர், சரவணன் கொடுத்த தகவலின் படி, புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் நீலாவதி, கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன், உட்பட, 28 பேர் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதியில், கி.பி., 10-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழ அரசரான, முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திய, நான்கு கல்வெட்டு களும், சிவன், பார்வதி, தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வர், ஆவுடையார் ஆகியோரின் கற் சிற்பங்களும், சிறிய நந்தி மூன்று, பெரிய நந்தி ஒன்று போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இது குறித்து, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் நீலாவதி கூறுகையில், தென்னலுார் மாரியம்மன் கோவில் அருகில், சோழர் காலத்தில் கட்டப்பட்டு உள்ள மடைக்கல் முற்றிலும் சிதைவுற்ற நிலையில் உள்ளது. கி.பி., 10-ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோவில் அவற்றின் இடிபாடுகள் அனைத்தும், ஊரின் கண்மாய் கரையின் உள்ளே சிதைவுற்றும், சில கற்சிலைகள் நல்ல நிலையிலும் காணப்படுகின்றன. கண்மாய் கரையில் காணப்படும் நந்தி, கொடும்பாளுர் நந்திக்கு அடுத்தப்படியான பெரிய நந்தி ஆகும். இந்த கண்மாயின் உட்பகுதிகளை இன்னும் அகழாய்வுக்கு உட்படுத்தினால், மேலும், புதையுண்டுள்ள சிலைகள், கல்வெட்டு களை கண்டுபிடிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.