இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் பங்குனித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார், மற்றும் தாயமங்கலம் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு தினமும் இரவு அம்மன் சிம்மம் , காமதேனு , அன்னம் , குதிரை வாகனங்களில் வீதி உலா நடைபெறுகிறது.