பதிவு செய்த நாள்
29
மார்
2017
11:03
உடுமலை : உடுமலை கம்மநாயுடு மகாஜனசங்கம் மற்றும் ஸ்ரீரேணுகாதேவி ஆன்மிக அறக்கட்டளை சார்பில், யுகாதி பண்டிகை இன்று ரேணுகாதேவி திருக்கல்யாணத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உடுமலை காந்திநகர் புற்றுக்கோவிலில், யுகாதி விழாவையொட்டி, கடந்த 17ம் தேதி முதல் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. நேற்றுமுன்தினம் புற்றுக்கோவில் வளாகத்தில், ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி பேசுகையில், ”கோவிலுக்கு செல்லும் பெண்கள், மனதை ஒருமுகப்படுத்தி, இறைவனை வழிபட வேண்டும். மாற்று சிந்தனைகளுக்கு கோவில் வளாகத்தில் இடமளிக்காமல், அம்மனை சிந்திப்பதால் மனம் அமைதி பெறுவதுடன், வாழ்வியல் சிந்தனைகளும் கைகூடும். பாரம்பரிய வழிபாடுகளை காலமாற்றங்கள் வந்தாலும் கைவிடாமல் இருப்பதே நம்நாட்டின் பண்பாடாகும்,” என்றார். இன்று காலை, 10:00 மணி முதல் யுகாதி பண்டிகை சிறப்பு பூஜைகள் ஜி.வி.ஜி., கலையரங்கில் நடைபெற்றது. அண்ணா குடியிருப்பு விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு, ரேணுகாதேவி திருக்கல்யாண உபன்யாசம், ஜமதக்னி மகரிஷி, ரேணுகாதேவி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.