பழநி: பழநி பங்குனி உத்திரத் திருவிழா திருஆவினன்குடி கோவிலில் ஏப்.,3ல் கொடியேற்றத்துடன் துவங்கி ஏப்.,12 வரை நடக்கிறது. திருவிழா கொடியேற்றத்துக்கு பின்னர் மலைக்கோவிலில் காப்புகட்டுதல் நடைபெறும். ஏப்.,8ல் திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம், ஏப்.,9ல் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்து வருகின்றனர். தங்கரதம் நிறுத்தம் : பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வழக்கமாக மலைக்கோவிலில் இரவு 7 மணிக்கு நடைபெறும் தங்கரதத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி ஏப்.,7 முதல் 11வரை நிறுத்தப்படுகிறது.