பதிவு செய்த நாள்
30
மார்
2017
10:03
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி மாத பெரு விழா, ஏப்., 2ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்., 13ம் தேதி வரை நடக்கிறது.
சைவ கோவில்களில் பிரசித்தி பெற்று விளங்கும் கபாலீஸ்வரர் கோவில், சென்னை மயிலாப்பூரில் அமை ந்துள்ளது. இங்கு சிவபெருமான் கபாலீஸ்வரராகவும், அம்பாள், கற்பகாம்பாளாகவும் அருள்பா லிக்கின்றனர். பிற்கால கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலின் நாற்புறமும், மாடவீதிகள், கோபுரங்கள், திருக்குளம் ஆகியவற்றுடன் விளங்குகிறது. ஆனால், பழைய கபாலீஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரம், துறைமுகப்பட்டினமாக விளங்கிய காலத்தில், இக்கோவில் புகழ் பெற்று விளங்கியது.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீஸ்வரர் மீது தேவாரப்பதிகங்களைப் பாடியுள்ளார். 16ம் நுாற்றாண்டில் போர்த்துக்கீசியர் இப்பகுதியினை கைப்பற்றி, ஒரு கோட்டையினைக் கட்டியபோது, இக்கோவிலையும் அழித்துவிட்டனர். பல நுாற்றாண்டுகள் கழிந்த பின், இன்றைய கோவில் கட்டப்பட்டது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதப் பெருவிழா, விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, பங்குனி பெருவிழா, ஏப்., 2ம் தேதி முதல், 13ம் தேதி வரை நடக்கிறது. கொடியேற்றத்தின் முதல் நாள், கிராம தேவதை பூஜையாக, கோலவிழியம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. ஏப்., 2ம் தேதி காலை, 5:30 மணி முதல், 6:30 மணிக்குள், கொடியேற்றத்துடன் பங்குனி விழா துவங்குகிறது. விழாவின் முக்கியநாளான, ஏப்.,4ம் தே தி, அதிகாரநந்தி சேவை ; ஏப்., 6ல், வெள்ளி ரிஷப வாகன காட்சி நடக்கிறது. ஏப்., 8ல், தே ர்திருவிழாவும்; ஏப்., 9ல், வெள்ளி விமானத்தில் உற்சவம், கபாலீஸ்வரர், 63 நாயன்மார்களோடு காட்சியளிக்கும் விழா நடக்கிறது. ஏப்., 11ல், திருக்கல்யாண உற்சவமும்; ஏப்., 12ல், பந்தம் பறி விழாவும்; ஏப்.,13ல், விடையாற்றி உற்சவமும் நடக்கிறது.