பதிவு செய்த நாள்
30
மார்
2017
10:03
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில், நடந்து வரும் தீமிதி திருவிழாவில், நேற்று, உற்சவர் திரவுபதியம்மன் திருக்கால்யாணம் நிகழ்ச்சி நடந்தது. திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, கடந்த, 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று மதியம், திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, ஒரு கலசம் வைத்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மதியம், 1:30 மணிக்கு உற்சவர் திரவுபதியம்மன், அர்ச்சுனன் பெருமானுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். நாளை (31ம் தேதி) சுபத்திரை அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் இரவு புஷ்ப பல்லக்கு சேவை உற்சவம் நடக்கிறது.