பதிவு செய்த நாள்
30
மார்
2017
11:03
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில், லகுசம்ரோக் ஷணம் விழா சிறப்பாக நடந்தது. ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான ராமானுஜரால் போற்றப்பட்ட, ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலில், ராமானுஜர், 1,000மாவது விழா கொண்டாட, ஏற்பாடுகள் மற்றும் கோவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.புனரமைக்கப்பட்ட கோபுரங்களுக்கு, கும்பாபிஷேகம் செய்யப்படும், லகு சம்ரோக் ஷனம் எனும் விழா, நேற்று நடந்தது.இதில், பக்தர்கள்திரளாகப் பங்கேற்று இறைவனை வணங்கினர்.அதேபோல், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், 21 லட்சம் ரூபாய் மதிப்புடைய, தங்க முலாம் பூசப்பட்ட பல்லக்கை, ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமிக்கு, காணிக்கையாக செலுத்தினர். அழகிய சிற்ப வேலைகளுடன் ஜோடிக்கப்பட்ட இந்த தங்க முலாம் பூசப்பட்ட பல்லக்கு, ஏப்., 21 முதல் மே 2ம் தேதி வரை நடைபெற உள்ள ராமானுஜரின், 1,000வது ஆண்டு திருநட்சத்திர விழா மற்றும் இதர விழா காலங்களில், சுவாமி வீதியுலாவின் போது, பயன்படுத்தப்பட உள்ளது.