பதிவு செய்த நாள்
30
மார்
2017
11:03
குன்னுார் : குன்னுார் சவுடேஸ்வரியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. குன்னுார் சவுடேஸ்வரியம்மன் கோவிலில், துர்முகி வருடத்தின் கடைசி அமாவாசையான பங்குனி அமாவாசை தினத்தில், அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. சவுடேஸ்வரியம்மன், ராமலிங்கேஸ்வரருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, சவுடேஸ்வரியம்மன் வெள்ளி கவச அலங்காரத்திலும், ராமலிங்கேஸ்வர் புஷ்ப அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், வறட்சி நீங்கி அனைத்து பகுதிகளிலும் மழை பெய்ய வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம், 14ம் தேதியன்று, தமிழ் வருடபிறப்பில், சுபிட்சம் நிலவவும் பூஜை கள் செய்யப்பட்டன. ஏற்பாடுகளை, அர்ச்சகர் குணாசாஸ்திரி தலைமையில், கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.