பதிவு செய்த நாள்
30
மார்
2017
11:03
மேல்மருவத்துார் : மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பக்தர்கள், 207 பேருக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, பங்காரு அடிகளார், நேற்று வழங்கினார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும், யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழா, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கல இசையுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர்.