பதிவு செய்த நாள்
30
மார்
2017
12:03
திருப்பூர்: திருப்பூர் காசி விஸ்வநாதர் கோவிலில், 67ம் ஆண்டு யுகாதி பண்டிகை, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊத்துக்குளி ரோடு, என்.ஆர்.கே., புரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில், ஆண்டுதோறும் யுகாதி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. யுகாதி பண்டிகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, திருவிளக்கு வழிபாடு நடந்தது. நுõற்றுக்கும் அதிகமான பெண்கள் பங்கேற்று, விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். நேற்று காலை, 9:00 மணிக்கு, காசி விஸ்வநாத சுவாமிக்கு, 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சந்தன காப்பு தரித்து, ராஜ அலங்காரத்தில் காசி விஸ்வநாதர் அருள்பாலித்தார். பெண்களுக்கான ஆன்மிக கும்மி பாடல் நிகழ்ச்சியும், 12:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றன. தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
· அவிநாசி மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், தீர்த்தம் எடுத்து சென்று, அபிஷேகம் செய்து வழிபட்டனர். திருப்பூர் வாலிபாளையம் சடையப்பன் கோவில், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி கோவிலில், யுகாதி திருவிழா கொண்டாடப்பட்டது. நேற்று காலை, குலாளர் வீதி, ஸ்ரீ மல்லாண்டீஸ்வரர் சுவாமிக்கு, பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். வாலிபாளையம் சமுதாய கூடத்தில் இருந்து பெண்கள், பால் குடம், முளைப்பாரி எடுத்து வந்து, சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். இதேபோல், பல்வேறு கோவில்களில், யுகாதி பண்டிகை சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.