பதிவு செய்த நாள்
30
மார்
2017
12:03
விருத்தாசலம்: கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. விருத்தாசலம், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திர பெருவிழா, நாளை (31ம் தேதி) துவங்கி, வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, அன்று காலை 9:00க்கு மேல் 10:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. தினமும் வெள்ளி மயில், ஆட்டுக்கிடா, குதிரை வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, வரும் ஏப்ரல் 8ம் தேதி தேரோட்டம், 9ம் தேதி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உற்சவர்கள் மணிமுக்தாற்றுக்கு சென்று, அங்கிருந்து காவடி ஊர்வலத்துடன் கோவிலுக்கு வந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அன்றிரவு கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. இதனை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்கு கோவில் வளாகத்தில் குடிநீர், பந்தல் அமைத்தல், கழிவறைகள், முட்புதர்கள் அகற்றி பாதை சீரமைப்பு மற்றும் கார் பார்க்கிங் செய்ய 5 ஏக்கர் நிலத்தை புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.