பதிவு செய்த நாள்
30
மார்
2017
12:03
காளையார்கோவில்: சிவகங்கை அருகே கொல்லங்குடி அரியாகுறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி விழா ஏப்., 3ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி ஏப்., 2 மாலை 7:00 மணிக்கு அனுக்கை விக்னேஸ்வரர் பூஜை நடக்கிறது. ஏப்., 3 ல் காலை 9:00 மணிக்கு தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடக்கிறது. ஏப்., 4 காலை 10:00 மணிக்கு 108 சங்காபிஷேகம், ஏப்., 7 ல் தேருக்கு முகூர்த்தக்கால் நடுதல், ஏப்., 10 இரவு 7;00 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் அம்மன் புறப்பாடு, ஏப்., 11 காலை 8:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏப்., 12 காலை 9:00 மணிக்கு தீர்த்தவாரி, இரவு மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, பால்குடம், சந்தனக்குடம், ஏப்., 13 காலை 9:00 மணிக்கு அம்மன் விடையாற்றி ஊஞ்சல் உற்சவம், இரவு 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்கரதம் புறப்பாடுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாட்டை இந்து சமயஅறநிலைய இணைஆணையர் செந்தில்வேலன், உதவி ஆணையர் ராமசாமி, செயல்அலுவலர் இளங்கோவன் செய்து வருகின்றனர்.