Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பக்தர்கள் கடும் வெயிலில் அவதி: ... ஸ்ரீவி., ஆண்டாள் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம் ஸ்ரீவி., ஆண்டாள் திருக்கல்யாணம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2017
12:04

அழகர்கோவில்:அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடந்த திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இக்கோவில் பங்குனி திருக்கல்யாண உற்சவம் ஏப்., 6ம் தேதி துவங்கியது. தினமும் மாலையில் பல்லக்கில் புறப்பட்ட சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.

முக்கிய விழாவான திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது. காலையில் ஸ்ரீதேவி, பூமா தேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகியோருடன் சர்வ அலங்காரத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். காலை 10:30 மணிக்கு ஹோமம் வளர்க்கப்பட்டு, மேள, தாளம், வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவங்கள் துவங்கின.

காலை 10:35 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், கோ பூஜையும் நடந்தது. பின் சுவாமிகளின் திருக்கல்யாண பட்டாடை, சீர்வரிசை பொருட்கள் கோயிலை சுற்றி எடுத்து வந்தனர். காலை 11:00 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க திருக்கல்யாணம் நடந்து.

சுந்தரராஜ பெருமாள் கரங்களில் இருந்த மங்கள நாண்களை 3 முறை உயர்த்தி காண்பித்த பட்டர்கள் ஸ்ரீதேவி, பூமாதேவி, கல்யாணசுந்தரவல்லி தாயார், ஆண்டாளுக்கு அணிவித்தனர்.
மஞ்சள், கயறு, குங்குமம் கொண்ட பிரசாத பாக்கெட் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

சோலைமலை முருகன் கோயில்: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோயில் விசேஷ பூஜை நடந்தது. 18ம் படி கருப்பண சுவாமி சன்னதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். காலை 11:00 மணிக்கு உற்சவர் முருகனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மூலவர் முருகப் பெருமானுக்கு வைர கிரீடம், வைர வேல் அணிவிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar