கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2017 02:04
கமுதி: கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று பக்தர்கள், பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். மார்ச் 31 ல், கொடியேற்றத்துடன் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவங்கியது. தொடர்ந்து, பல்வேறு அலங்காரங்களில் அம்மன் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று 13 ஆம் நாள் நிகழ்ச்சியாக பக்தர்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். இன்று(ஏப்.,12) அக்னி சட்டி, பால்குடம் எடுத்தல், கரும்பாலை தொட்டில் நேர்த்தி கடன் செலுத்தி, பூக்குழி இறங்குதல் நடக்கிறது.