திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2017 06:04
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் கோடை விடுமுறை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது.இதனால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் திருநள்ளாரில் குவிகின்றனர்.தற்போது அனைத்து பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் ஆவதிப்பட்டு வரும் நிலையில் திருநள்ளார் சனீஸ்வரபகாவன் கோவிலில் சனிக்கிழமையில் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக கணப்பட்டது.மேலும் வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் வெயில் அதிகாரித்து வருவதால் தற்காலிகமாக பந்தல் மற்றும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் சிறப்பாக செய்துள்ளது.