Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி குரு ராகவேந்திரர் ... பழநியில் குவியும் பக்தர்கள்: 3 மணி நேரம் காத்திருப்பு பழநியில் குவியும் பக்தர்கள்: 3 மணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னி வசந்த உற்சவம்: துரியோதனனை இழந்த சோகம்.. துவம்சம் செய்தார் காந்தாரி
எழுத்தின் அளவு:
அக்னி வசந்த உற்சவம்: துரியோதனனை இழந்த சோகம்.. துவம்சம் செய்தார் காந்தாரி

பதிவு செய்த நாள்

17 ஏப்
2017
11:04

ஆர்.கே.பேட்டை:கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்த அக்னி வசந்த உற்சவத்தில், நேற்று, துரியோதன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடந்தது. பதினெட்டாம் நாள் போர்க்கள நிகழ்வில், மூத்த மகன் துரியோதனனை இழந்ததால் ஆவேசமான காந்தாரி, அங்கு இருந்தவர்களை துடைப்பம் மற்றும் முறத்தால், அடித்து துவம்சம் செய்தார்.1,000 பக்தர்கள் விரதம்ஆர்.கே.பேட்டை, திரவுபதியம்மன் தீமிதி திருவிழா, 15 நாட்களாக நடந்து வருகிறது. இதில், தினசரி, மகாபாரதம் சொற்பொழிவு, தெருக்கூத்து உள்ளிட்டவை நடந்து வந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி, விரதம் மேற்கொண்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை பூங்கரகம் ஊர்வலம் நடந்தது. இதை தொடர்ந்து, நேற்று, காலை 10:00 மணிக்கு, 18ம் நாள் போர்க்களம் நிகழ்வு தெருக்கூத்து கலைஞர்களால், நடத்தப்பட்டது. இதில், பீமசேனன், துரியோதனை வீழ்த்தினான். கொல்லப்பட்ட துரியோதனன் குருதியை கூந்தலில் தடவி, தன் சபதத்தை பாஞ்சாலி நிறைவேற்றி கொண்டார்.

அதே நேரம், தன் மூத்த மகன் துரியோதனனை இழந்த சோகத்தில், அங்கே போர்க்களத்தில் கூடியிருந்தவர்களை, காந்தாரி துடைப்பம் மற்றும் முறம் கொண்டு நைய புடைத்தாள். காந்தாரியிடம் துடைப்பம், முறத்தால் அடி வாங்க, அங்கிருந்தவர்கள் முண்டியடித்து கொண்டனர். அதை தொடர்ந்து, நித்ய திருமங்சனத்திற்காக, திரவுபதியம்மன், பஞ்ச பாண்டவர், கிருஷ்ணர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள், குளக்கரைக்கு எழுந்தருளினர்.

தர்மர் பட்டாபிஷேகம்:
மாலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் மூட்டப்பட்ட அக்னி குண்டத்தில், திரவுபதியம்மன் பக்தர்கள் பரிவாரத்துடன் இறங்கினார். இன்று காலை, தர்மராஜாவுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு, நகர்வலம் வருகிறார். இன்றுடன், திருவிழா நிறைவு பெறுகிறது. இதே போல், அத்திமாஞ்சேரிபேட்டை திரவுபதியம்மன் கோவிலிலும், நேற்று, தீமிதி திருவிழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar