பழநியில் குவியும் பக்தர்கள்: 3 மணி நேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2017 11:04
பழநி: பழநி மலைக்கோயிலில் நேற்று பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.,12ல் முடிந்த பிறகும், பக்தர்கள் தீர்த்தக் காவடி, பால்குடங்கள் எடுத்து வந்து கொண்டிருக்கின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் ரோப்கார், வின்ச் நிலையங்களில் 2 மணி நேரம் காத்திருந்து மலைக் கோயிலுக்கு சென்றனர். வெளிப்பிரகாரம் வரை நீண்ட வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இரவில் நடந்த தங்க ரத புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.