பதிவு செய்த நாள்
17
ஏப்
2017
11:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஷ்டபுஜபெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில், நேற்று காலை, நாச்சியார் திருக்கோலத்தில் பெருமாள், வீதியுலா சென்றார். காஞ்சிபுரத்தில் வைணவ கோவில்களில் சிறப்பு பெற்று விளங்கும், அஷ்டபுஜபெருமாள் கோவிலில், கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. ஐந்தாம் நாள் காலை உற்சவமான நேற்று, நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளிய அஷ்டபுஜபெருமாள், கோவில் மாட வீதி மற்றும் டி.கே.நம்பி தெரு, முள்ளாப்பாளையம் தெரு, முனுசாமி அவென்யூ வழியாக, வீதியுலா வந்தார். நாளை காலை,தேர் உற்சவம், சின்ன காஞ்சிபுரம் பெருமாள் கோவில் வரை சென்று, கோவிலுக்கு திரும்புவார். மற்ற நாட்களில் வழக்கம் போல், கோவில் மாடவீதிகளில் மட்டும் வலம் வருவார். காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் நாச்சியார் அலங்கா ரத்தில் பவனி அஷ்டபுஜப் பெருமாள் நாச்சியார் திருகோலத்தில் பக்தர ்களுக்கு அருள்பாலித்தார். இடம்:காஞ்சிபுரம்.