ராமேஸ்வரம் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு : டி.ஜி.பி.,க்கு கடிதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2017 01:04
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் கூடுதல் பாதுகாப்பு கோரி டி.ஜி.பி.,க்கு கடிதம் எழுதப் படும், என இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி தெரிவித்தார்.
ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் 29 கோடி ரூபாயில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பக்தர்கள் வசதிக்காக, யாத்திரை நிவாஸ் தங்கும் விடுதி கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. இதை அந்த துறையின் ஆணையர் வீரசண்முகமணி பார்வையிட்டார். ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.பின்னர் ஆணையர் வீரசண்முகமணி கூறியதாவது: ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களிடம் நடக்கும் திருட்டை தடுக்க, கூடுதல் பாதுகாப்பு கேட்டு டி.ஜி.பி.,க்கு கடிதம் அனுப்பப்படும். மூடி கிடக்கும் வடக்கு, தெற்கு ராஜகோபுரங்கள் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும். யாத்திரை நிவாஸ் கட்டுமானப் பணி, ஓராண்டுக்குள் நிறைவடையும், என்றார்.