பதிவு செய்த நாள்
17
ஏப்
2017
01:04
செஞ்சி: செஞ்சிக்கோட்டை சாதுத்துல்லாகான் மசூதியில் முஸ்லிம்கள் மழை வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் பருவ மழை பொய்த்ததால் நிலத்தடி நீர் மட்டம் 400 அடிக்கும் கீழே சென்று, குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளும் பலனின்றி, நாளுக்கு நாள் குடிநீர் பஞ்சம் அதிகரித்து வருகிறது. கோடை வெயில் சுட்டெரிப்பதால் நிலைமை மேலும் மோசமாகும் சூழல் உள்ளது.
இந்த சூழ்நிலையில், செஞ்சி தாலுகாவை சேர்ந்த முஸ்லிம்கள், மழை பெய்ய வேண்டி, நேற்று செஞ்சி கூட்டுரோட்டில் இருந்து செஞ்சிக்கோட்டை சாதுத்துல்லாகான் மசூதிக்கு ஊர்வலமாக
சென்றனர். அங்கு, முற்பகல் ௧1.௦௦ முதல் 11.30 மணி வரை, கொளுத்தும் வெயிலில், மழை வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். செஞ்சி வட்ட ஜமாத் தலைவர் சையத் மஜீத்பாபு தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., மஸ்தான், பள்ளிவாசல் தலைவர்கள் சாதுல்லா, அஷ்ரப்அலி, அலீம்குரோஷி, இப்ராகிம், அன்சர், முனீர் மற்றும் செஞ்சி தாலுகாவை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.