சிதம்பரம்: சிதம்பரம், மெய்க்காவல் தெரு பொற்பாத விநாயகர் கோவிலில் சித்திரைப் பெருவிழாவையொட்டி திருவிளக்கு சிறப்பு பூஜை நடந்தது.
சிதம்பரம் மெய்க்காவல் தெரு பொற்பாத விநாயகர் கோவிலில் சித்திரைப் பெருவிழா 14ம் தேதி காலை 5 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்கி மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் உற்சவத்தில் காலை பொற்பாத விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், திபாராதனைகள் நடைப்பெற்று, பக்தர்கள் காவடி எடுத்து வீதி உலாக்காட்சி நடந்தது. மாலை 1008 தீப ஏற்றுதல், பஞ்சாங்க படனம் நிகழ்ச்சி மற்றும் சுவாமி புறப்பாடு நடந்தது. இதனையொட்டி தினம் விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், சிறப்பு வழிப்பாடுகள், ஆன்மீக சொற்பொழிவு அன்னதானம் மற்றும் இரவு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தது. 3ம் நாள் உற்சவத்தையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் பங்கேற்று குத்துவிளக்கு அலங்காரம் செய்து விளக்கு ஏற்றி சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் பொற்பாத விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைப்பெற்றது.