பதிவு செய்த நாள்
18
ஏப்
2017
11:04
கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவிலில், புதிதாக நடராஜர் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து திருக்கல்யாணம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், நேற்று காலை, 11:00 மணியளவில், புதிதாக நடராஜர் சிலை, அம்மன் விக்கிரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பல்வேறு அலங்காரம் செய்து, சுவாமிக்கு திருக்கல்யாணம், தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், பழையஜெயங்கொண்டம், லட்சுமணப்பட்டி, மகாதானபுரம், குளித்தலை, லாலாப்பேட்டை போன்ற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜைகளை, அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் செய்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.