நாகை: சீர்காழியை அடுத்த சென்னியநல்லூர், சுப்பராயன்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
சீர்காழியை அடுத்த சென்னியநல்லூர், சுப்பராயன்பேட்டை கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோயிலில் காஞ்சி மகாபெரியவர் சுவாமியை வழிபட்டதாக கூறப்படுகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயில் கடந்த சில ஆண்டுகளாக சிதிலமடைந்திருந்தது.இதனையடுத்து டிரஷ்டி லட்சுமணன் தலைமையில் கிராமமக்கள் பங்கேற்புடன் கோயில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடை பெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த புதன் கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது. இன்று காலை 5ம் கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணாகுதி மற் றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. பின்னர் யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து சன்னதி விமானத்தை அடைந்தது. பின்னர் சிவாச் சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் வைத்திருந்த புனித நீரை நடராஜ சிவாச்சாரியார் கோபுரக் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளதன பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.