பதிவு செய்த நாள்
22
ஏப்
2017
11:04
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, வரும் 29ம் தேதி முதல் துவங்கி, அடுத்த மாதம், 10ம் தேதி வரை நடக்கிறது. திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை, மாலை என, இரு வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், இந்தாண்டின் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, வரும், 29ம் தேதி, விநாயகர் வீதியுலாவுடன் துவங்குகிறது. மறுநாள் (30ம் தேதி) காலை, 7:00- மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த மாதம், 7ம் தேதி இரவு, தெய்வானை திருக்கல்யாண உற்சவம், 10ம் தேதி சப்தாபரணம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
நிகழ்ச்சிகள் விபரம்
தேதி நேரம் வாகனம்
ஏப்., 29 இரவு 7:00 -விநாயகர் வீதியுலா
ஏப்., 30 காலை 7:00 கொடியேற்றம் இரவு 7:00 கேடய உலா
மே 1 காலை 9:30 வெள்ளி சூர்ய பிரபை இரவு 7:00 பூத வாகனம்
மே 2 காலை 9:30 சிம்ம வாகனம் இரவு 7:00 ஆட்டுக்கிடாய் வாகனம்
மே 3 காலை 9:30 பல்லக்கு சேவை இரவு 7:00 வெள்ளி நாக வாகனம்
மே 4 காலை 9:30 அன்ன வாகனம் இரவு 7:00 வெள்ளி மயில் வாகனம்
மே 5 மாலை 4:30 புலி வாகனம் இரவு 7:00 யானை வாகனம்
மே 6 இரவு 7:00 தேர் மே 7 காலை 9:30 யாளி வாகனம் இரவு 7:00 குதிரை வாகனம், இரவு 8:00 தெய்வானை திருக்கல்யாணம்
மே 8 காலை 6:00 கேடய உலா மாலை 5:00 கதம்பப் பொடி விழா, இரவு 8:00 சண்முகர் உற்சவம்
மே 9 காலை 5:00 தீர்த்தவாரி சண்முக சுவாமி உற்சவம், மாலை 5:00 கேடயம், உற்சவர் அபிஷேகம் இரவு கொடி இறக்கம்
மே 10 மாலை 4:00 சப்தாபரணம்