பதிவு செய்த நாள்
22
ஏப்
2017
11:04
வேலுார்: வந்தவாசியில் மீட்கப்பட்ட நவக்கிரக சிலைகளை, வேலுார் அரசு அருங்காட்சியகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்த குமரேசன், 2010ல் சித்தேரியில் மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள முட்புதரில், சிலைகள் இருப்பதை வருவாய்த் துறையினரிடம் தெரிவித்தார். அவர்கள், அங்கிருந்த, 10 சிலைகளை மீட்டு, வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.இந்த சிலைகள் குறித்து, உரிமை கோருவதற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. கடந்த, ஆறு ஆண்டுகளாக சிலைகளுக்கு யாரும் உரிமை கோராததால், வந்தவாசி தாசில்தார், வேலுார் அரசு அருங்காட்சியகத்தில், சிலைகளை ஒப்படைத்தார். இதுகுறித்து, அருங்காட்சியக காப்பாட்சியாளர் கூறுகையில், நவக்கிரக கற்சிலைகள் ஒன்பதும், இரண்டு அடி உயரமுள்ள, ஒரு அம்மன் சிலையும் உள்ளது. இவை, 50 ஆண்டுகள் பழமையானது என்றார்.