பதிவு செய்த நாள்
24
ஏப்
2017
12:04
ஆர்.கே .பேட்டை: திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், நேற்று காலை , துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடந்தன. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆர். கே. பேட்டை அடுத்த அய்யனேரி கிராமத்தில், தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி, நடந்து வருகிறது. நேற்று காலை , துரியோதனன் படுகளம் நடத்தப்பட்டது. காலை, 10:00 மணிக்கு, கோவில் முன்பாக அமைக்கப்பட்ட போர்க்களத்தில், துரியோதனன் களிமண் சிலை , பிரம்மாண்டமாக செய்யப்ப ட்டிருந்தது. தெருக்கூத்து கலைஞர்கள் துரியோதனன், பீமசேனன் வேடம் அணிந்து போரிட்டனர். இறுதியில், பீமசேனன், துரியோதனனை வீழ்த்தினார். இதை காண திரளான பக்தர்கள் திரண்டிருந்தனர். மாலை , 6:00 மணிக்கு, காப்பு கட்டி விரதம் மேற் கொண்டிருந்த பக்தர்கள், கோவில் வளாகத்தில் மூட்டப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கி, தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இன்று காலை தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.