பதிவு செய்த நாள்
25
ஏப்
2017
10:04
ஓசூர்: ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், ஒரு லட்சத்து, 8,000 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை எம்.ஜி.,ரோட்டில் உள்ள அப்பாஜிரெட்டி லட்சுமி தேவம்மா திருமண மண்டபத்தில், தேன்கனிக்கோட்டை வாசவி கிளப், வாசவி வனிதா கிளப், வாசவி யுவசேனா கிளப், வாசவி பிளாட்டினம் கப்புள்ஸ் கிளப் ஆகியவை சார்பில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் நோய், நொடியின்றி நீண்ட ஆயுள் பெறவும், ஒரு லட்சத்து, 8,000 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நேற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், கைலாச லிங்கம், ருத்ராட்ச லிங்கம், ஹரிகர லிங்கம், பிரதோஷ லிங்கம், உத்பவ லிங்கம், சந்திரலிங்கம், ஆர்யலிங்கம், பஞ்சபூத லிங்கம், அஷ்டோத்திர லிங்கம், ஷோடச லிங்கம், சதுர்முக லிங்கம் உட்பட, 14 வகையான லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி, அஞ்செட்டி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதை தரிசனம் செய்து சென்றனர். நேற்று துவங்கிய லிங்க பூஜை, வரும், 28 வரை நடக்கிறது.