பதிவு செய்த நாள்
25
ஏப்
2017
12:04
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சோமவார பிரதோஷ விழா நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. நந்தி பகவான் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். பால், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தன அபிஷேகம் நடந்தது. மலர், மாலைகளால் அலங்கரிக்கபட்டு நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் சமேத பவளநிற வள்ளியம்மன் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. மாலை 4:00 மணிக்கு நந்தி பகவான், மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் சிவநாம அர்ச்சனை, பிரதோஷ பாடல்களை பாடினர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.
சிக்கல்: மேலக்கிடாரம் திருவனந்தீஸ்வரர் கோயிலில் பிரதோச வழிபாடு நடந்தது. மூலவர் மற்றும் நந்தீஸ்வரருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.
உத்தரகோசமங்கை: மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சோமவாரம், பிரதோஷம், சிவராத்திரி ஆகிய மூன்றும் ஒரே நாளில் வந்ததை முன்னிட்டு காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.