திருப்புத்துார் : சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜைகள் துவங்கின. பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் திருப்பணி நடந்து மே 1ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. ஏப்., 24ல் யாகசாலைக்கான பூர்வாங்க பூஜைகள் கோயிலில் நடந்தன. நேற்று காலை பிரசன்னாபிஷேகம், பரிவார கலாகர்ஷணம் நடந்தது. மாலையில் கோயில் மூலவர் சன்னதி முன்பாக கொடிமரம் அருகில் கும்பங்களுக்கு அலங்காரம் நடந்து, கலசங்களில் சிவாச்சாரியார்களால் புனிதநீர் நிரப்பப்பட்டது. பின்னர் கலசங்களை ஏந்தி சிவாச்சாரியார்கள் யாகசாலைக்கு புறப்பட்டனர். இரவு 7:45 மணிக்கு முதற் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. ஏற்பாட்டினை பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் நகரத்தார் செய்கின்றனர்.