திண்டுக்கல் அபிராமியம்மன் சித்திரை பெருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2017 10:04
திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமியம்மன் கோயில் சித்திரை பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 8:10 மணி முதல் 8:50க்குள் கொடியேற்றம் நடந்தது. பின், அம்பாள், சுவாமி சிறப்பு பூஜை ஆராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கான சிறப்பு வழிபாடும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா காட்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் பெற்றனர். இன்று சுவாமி நந்திகேசுவரர் வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்தில் வரும் திருவீதியுலா காட்சியும் நடக்க உள்ளது.