பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் உத்தமபட்ச யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2017 11:04
காரைக்குடி: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் 33 யாககுண்டங்கள் அமைக்கப்பட்ட உத்தமபட்ச யாகம் எட்டுகால பூஜைகளுடன் 108 சிவாசாரிய்ர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பகவிநாயகர் கோயில் உலகப்பிரசித்தி வாாய்ந்தது. இத்திருக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் வருகிற மே1ம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. நகரத்தார்கள் எனப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் பரம்பரை நிர்வாகத்திலுள்ள இத்திருக்கோயிலின் திருப்பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் கற்பகவிநாயகருக்கு 33 யாககுண்டங்கள் அமைக்கப்பட்ட உத்தமபட்ச யாகம் எட்டுகால பூஜைகளுடன் 108 சிவாசாரிய்ர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. பிள்ளையார்பட்டி சிவஸ்ரீ பிச்சை சிவாசாரியார் தலைமையில் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாசாரியார் மூன்றாம்கால யாகத்தை நிகழ்த்தினார். லண்டன் அமெரிக்கா கனடா மலேசியா இலங்கை முதலிய நாடுகளைச்சார்ந்த மற்றும் தமிழக ஆலயங்களைச்சார்ந்த 108 சிவாசாரிய்ரகள் 108 யாககுண்டங்களில கும்பாபிஷேக யாகத்தை நடத்துகிறார்கள். மகா கும்பாபிஷேகத்தைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் தமிழகஅரசும் கோயில் நிர்வாகமும் இணைந்து சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள்.பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் விரிவாகச் செய்துள்ளனர்.