பதிவு செய்த நாள்
29
ஏப்
2017
12:04
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வாலை சாமுண்டீஸ்வரி கோவிலில், சித்திரை அமாவாசையை ஒட்டி, 508 பால்குட விழா நடந்தது. திருக்கழுக்குன்றம் - செங்கல்பட்டு சாலை, வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில், வாலை சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை அமாவாசையை ஒட்டி, பால்குட விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, 29வது ஆண்டு, பால்குட விழா நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு நடந்தது. இதற்காக, ஒன்பது நாள் காப்புக்கட்டி, மூன்று நாள் யாகம் வளர்த்து, பின், மங்கள வாத்தியத்துடன், 508 பால் குடத்துடன் வந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதில் திருக்கழுக்குன்றம் மற்றும் சென்னை, கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.