Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? கீதை கூறும் தவங்கள் மூன்று!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அடிக்கிற கை தான் அணைக்கும் சொல்கிறார் அரவிந்தர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2017
03:04

சிறந்த நண்பர் கடவுள் மட்டுமே. நம்மை எப்போது அடிக்க வேண்டும், எப்போது அணைக்க வேண்டும் என்பதை அவர் மட்டுமே நன்கு அறிவார்.
* கடவுளின் அருளாட்சியில் தீமை என்பதே கிடையாது. நலமோ அல்லது நலம் உண்டாக்கும் முயற்சியோ தான் எங்கும் நடந்து
கொண்டிருக்கிறது.
* காலணி ஏதும் இல்லாமல் மிகக் கடினமான முள் பாதையிலும் நடந்து செல்லும் சக்தி, அன்பு என்னும் பாதத்திற்கு
மட்டுமே இருக்கிறது.
* சோர்வு உங்களை சோர்வடைய செய்து விடக் கூடாது. அதிலிருந்து விலகி, அதன் காரணத்தை கண்டறியுங்கள். அதை போக்கும் முயற்சியில் இறங்குங்கள்.
* நேர்மை உங்களிடம் இருக்கும் வரை, செல்லும் வழியெல்லாம் கடவுள் துணைக்கு வருவதை கண்கூடாகக் காண்பீர்கள்.
* பிறர் நலம் பேணும் எண்ணம் மனதில் உண்டாகும் போது,
தன்னலத்தின் வானளாவிய வடிவமாக (விஸ்வ ரூபம்) நீங்கள் மாறுவதை உணர முடியும்.
* மனிதர்களை நேசித்து அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுக்கு ஆசைப்படாமல் கவனமாக இரு.
* நல்ல லட்சியங்களுக்காக நாம் வாழ வேண்டும்.
நற்பணிகளில் எப்போதும் ஈடுபட வேண்டும். இதற்காகவே மனித உடல் வழங்கப்பட்டு இருக்கிறது.
* எவரையாவது ஏளனம் செய்ய தோன்றினால், உங்களின் உள்ளத்தை உற்று நோக்குங்கள். மடமை குணம் உங்களிடமும் இருப்பதை கண்டு சிரிக்க நேரிடும்.
* பிடிக்காத ஒரு விஷயத்தை கேட்க நேர்ந்தாலும்,
பொறுமையுடன் கேளுங்கள். ஆராய்ந்து பார்த்து அதிலுள்ள
உண்மையை கண்டு பிடியுங்கள்.
* கடவுளின் கண்ணுக்கு அற்பமானது என்று எதுவும் கிடையாது. அதுபோல உங்களின் கண்ணுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம்.
* வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கடவுளின் நினைவோடு இருக்க வேண்டும். இரவு உறங்குவதும், காலையில் எழுவதும் நீங்கள் அளிக்கும் காணிக்கையாக இருக்கட்டும்.
* உத்தம செயல்களை செய்ய விரும்பினால், அதை
உடனடியாகச் செய்வதே சிறந்தது.பிறருக்கு சேவை செய்யும் பொதுநலத்துடன் வாழ்வதே உயர்ந்த வாழ்வாகும்.
* இன்பம் தரும் கற்பனைகளை விட்டு ஒழித்து கண்களை திறந்து பாருங்கள். உலகையும், உலகைப் படைத்த கடவுளையும் உள்ளபடி உணர முற்படுங்கள்.
* பகைவர்கள் யாரும் நமக்கு வெளியில் இல்லை. சுயநலம், கோழைத்தனம், பயம் போன்ற தீய எண்ணங்களே உள்ளத்தில் இருந்து நம்மை ஆட்டுவிக்கின்றன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar