சிறந்த நண்பர் கடவுள் மட்டுமே. நம்மை எப்போது அடிக்க வேண்டும், எப்போது அணைக்க வேண்டும் என்பதை அவர் மட்டுமே நன்கு அறிவார். * கடவுளின் அருளாட்சியில் தீமை என்பதே கிடையாது. நலமோ அல்லது நலம் உண்டாக்கும் முயற்சியோ தான் எங்கும் நடந்து கொண்டிருக்கிறது. * காலணி ஏதும் இல்லாமல் மிகக் கடினமான முள் பாதையிலும் நடந்து செல்லும் சக்தி, அன்பு என்னும் பாதத்திற்கு மட்டுமே இருக்கிறது. * சோர்வு உங்களை சோர்வடைய செய்து விடக் கூடாது. அதிலிருந்து விலகி, அதன் காரணத்தை கண்டறியுங்கள். அதை போக்கும் முயற்சியில் இறங்குங்கள். * நேர்மை உங்களிடம் இருக்கும் வரை, செல்லும் வழியெல்லாம் கடவுள் துணைக்கு வருவதை கண்கூடாகக் காண்பீர்கள். * பிறர் நலம் பேணும் எண்ணம் மனதில் உண்டாகும் போது, தன்னலத்தின் வானளாவிய வடிவமாக (விஸ்வ ரூபம்) நீங்கள் மாறுவதை உணர முடியும். * மனிதர்களை நேசித்து அவர்களுக்குத் தொண்டு செய். ஆனால், அவர்களின் பாராட்டுக்கு ஆசைப்படாமல் கவனமாக இரு. * நல்ல லட்சியங்களுக்காக நாம் வாழ வேண்டும். நற்பணிகளில் எப்போதும் ஈடுபட வேண்டும். இதற்காகவே மனித உடல் வழங்கப்பட்டு இருக்கிறது. * எவரையாவது ஏளனம் செய்ய தோன்றினால், உங்களின் உள்ளத்தை உற்று நோக்குங்கள். மடமை குணம் உங்களிடமும் இருப்பதை கண்டு சிரிக்க நேரிடும். * பிடிக்காத ஒரு விஷயத்தை கேட்க நேர்ந்தாலும், பொறுமையுடன் கேளுங்கள். ஆராய்ந்து பார்த்து அதிலுள்ள உண்மையை கண்டு பிடியுங்கள். * கடவுளின் கண்ணுக்கு அற்பமானது என்று எதுவும் கிடையாது. அதுபோல உங்களின் கண்ணுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம். * வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் கடவுளின் நினைவோடு இருக்க வேண்டும். இரவு உறங்குவதும், காலையில் எழுவதும் நீங்கள் அளிக்கும் காணிக்கையாக இருக்கட்டும். * உத்தம செயல்களை செய்ய விரும்பினால், அதை உடனடியாகச் செய்வதே சிறந்தது.பிறருக்கு சேவை செய்யும் பொதுநலத்துடன் வாழ்வதே உயர்ந்த வாழ்வாகும். * இன்பம் தரும் கற்பனைகளை விட்டு ஒழித்து கண்களை திறந்து பாருங்கள். உலகையும், உலகைப் படைத்த கடவுளையும் உள்ளபடி உணர முற்படுங்கள். * பகைவர்கள் யாரும் நமக்கு வெளியில் இல்லை. சுயநலம், கோழைத்தனம், பயம் போன்ற தீய எண்ணங்களே உள்ளத்தில் இருந்து நம்மை ஆட்டுவிக்கின்றன.