பதிவு செய்த நாள்
02
மே
2017
12:05
நெல்லையப்பர் கோவிலில், யுனெஸ்கோஅதிகாரிகளை ஆய்வு செய்யவிடாமல் சிலர் தடுத்ததை, அறநிலையத் துறை அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.உயர் நீதிமன்ற பரிந்துறையின், தமிழகத்தில் உள்ள பிரதான கோவில்களில், யுனெஸ்கோ அமைப்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
நேற்று முன்தினம், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு, அக்குழு சென்றபோது, சிலர், ஆய்வு நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை, அறநிலையத் துறை அதிகாரிகள், வேடிக்கை பார்த்ததால் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, யுனெஸ்கோ குழு சார்பில், கோவில்களில், உயர் நீதிமன்ற பரிந்துரையின் பேரில் ஏன் ஆய்வு நடத்தப்படுகிறது என்பது குறித்து நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது. அதன் பின், உண்மையை உணர்ந்து கொண்ட எதிர்ப்பாளர்கள் மன்னிப்பு கேட்டு விலகி சென்றனர். நமது நிருபர் -