பதிவு செய்த நாள்
02
மே
2017
02:05
மீஞ்சூர்: ஏகாம்பரநாதர் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுரம் உள்ளிட்ட பரிவார சன்னதிகளுக்கு, நேற்று, மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடந்தது.
வடகாஞ்சி எனப்படும், மீஞ்சூர் காமாட்சி அம்பிகை சமேத ஏகாம்பரநாதர் கோவிலில், புதிதாக ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. கோவிலில் உள்ள சன்னதிகளும்
புனரமைக்கப்பட்டு வந்தன. ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் பணிகள் மற்றும் கோவில் சன்னதி புனரமைப்பு பணிகள் முடிவுற்ற நிலையில், நேற்று, காலை, 6:30 மணிக்கு மகா
கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை, 6:30 மணிக்கு, பிரதான கலசங்கள் ஆலயம் வலம் வந்தன. காலை, 6:45 மணி, ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுர கலசங்கள் மீதும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமி, காசிவிஸ்வநாதர் விசாலாட்சி, நவகிரகம், நந்திகேஸ்வரர் சன்னதிகளிலும் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.பகல், 12:00 மணி, மகாபிஷேகமும், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று, பெருமானை வழிபட்டனர்.