உளுந்துார்பேட்டை : கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை பெரு விழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெரு விழா கடந்த 25ம் தேதி மாலை 5.15 மணிக்கு சாகை வார்த்தலுடன் துவங்கியது.முக்கிய திருவிழாவான நேற்று இரவு சுவாமிக்கு திருக்கண் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் திருநங்கைகள் பூசாரிகளின் கைகளால் தாலி கட்டிக் கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.இன்று(10ம் தேதி) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. வரும் 12ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் சித்திரை பெரு விழா நிறைவு பெறுகிறது.