நீங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்போது அவர் உங்கள் முன் இருக்கிறார் என்பதையும், நீங்கள் கூறுவதை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும் உறுதியாக நம்புங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால், அதில் யாதொரு பயனும் விளையாது. முதலில் அவரை பூஜை அறைக்குள்ளும் பின்னர், உங்கள் உள்ளக் கோயிலின் உள்ளும் அன்புடன் வரவேற்று, மனதார பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு மலரும், சொல்லும் ஒவ்வொரு மந்திரமும் அவரைச் சென்றடைகின்றன என்பதை நன்கு அறியுங்கள். எண்ணம், மனம், ஆத்மா இவை யாவற்றையும், இறுதியாக உங்களையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்து விடுங்கள்.