ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2).. குடும்பத்தில் குதூகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2017 04:05
மனம் திறந்து பாராட்டும் ரிஷப ராசி அன்பர்களே!
இந்த மாதம் 5ம் இடத்தில் இருக்கும் குருவால் தொடர்ந்து நன்மை உண்டாகும். சுக்கிரன் மே 30 வரை ராசிக்கு 10ம் இடத்தில் இருந்து ஆதாயம் தர காத்திருக்கிறார். சனி 7ம் இடமான விருச்சிகத்தில் இருப்பது சிறப்பல்ல. அவரால் குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். வீண் அலைச்சல் அதிகரிக்கும். வெளியூரில் தங்கும் சூழ்நிலை ஏற்படலாம். ஆனாலும், சனியின் 9ம் இடப் பார்வை சாதகமாக உள்ளதால் நன்மை ஓரளவு கிடைக்கும். ராசியில் இருக்கும் சூரியன், செவ்வாய், 12ல் உள்ள புதன், 10ல் உள்ள கேது, 4ல் உள்ள ராகு ஆகியோரால் ஓரளவு நன்மை கிடைக்கும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பணியாளர்கள் திடீர் இடமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். குருவால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். பொருளாதார வளம் படிப்படியாக அதிகரிக்கும். எதிர்கால வளர்ச்சி குறித்து திட்டமிடுவீர்கள். பிள்ளைகளின் வாழ்வில் மேன்மை உண்டாகும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஜூன் 1,2ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வர வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.
மே 26க்கு பிறகு சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருப்பது அவசியம். உடல் நலம் லேசாக பாதிக்கப்படும். மே 16,17,18 ஜூன் 13,14ல் லேசான வயிறு பிரச்னை வரலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். போட்டியாளர்களால் அவ்வப்போது தொல்லை வந்தாலும், சனி பகவானின் அருட்பார்வையால் முறியடிப்பீர்கள். மே 23,24,27,28,29 ல் சந்திரனால் சிறு தடைகள் ஏற்படலாம். ஜூன் 5,6,7ல் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்க வாய்ப்புண்டு. மே 26 க்கு பிறகு அரசாங்க வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். வேலைப்பளு அதிகரிக்கும். குருவின் பலத்தால் திறம்பட சமாளிப்பர்.
சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு நல்ல முறையில் கிடைக்கும். மே 26 க்கு பிறகு அரசாங்க வேலையில் இருப்பவர்கள் பணியில் அக்கறை கொள்வது நல்லது. மே19,20 ஆகியவை சிறப்பான நாட்களாக அமையும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சேமிக்கும் விதத்தில் வருமானம் கிடைக்கும். மே 30 க்கு பிறகு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காது. அரசியல்வாதிகள் எதிர்பார்த்த நற்பலனை பெற முடியாது. பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஜூன் 3,4ல் மனக்குழப்பம் ஏற்படலாம். மாணவர்கள் சீரான கல்வி வளர்ச்சி காண்பர். குருவால் விரும்பிய நிறுவனத்தில் இடம் கிடைக்கும். ஆசிரியர் மத்தியில் நற்பெயர் உண்டாகும்.
விவசாயிகளுக்கு கால்நடை மூலம் வருமானம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரத்தில் சுமாரான பலன் கிடைக்கும். பெண்கள் கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பு பெற்று மகிழ்வர். அண்டை வீட்டாருடன் இணக்கம் அதிகரிக்கும். ஆன்மிக சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் பொறுமை தேவை.
மே 30,31ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்க யோகமுண்டு. பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப் பொருள் வரப் பெறலாம். ஜூன் 8,9 ல் விருந்து,விழா என சென்று வருவீர்கள். சகோதரர் வகையில் பண உதவி கிடைக்கும்.
பரிகாரம்: * தினமும் காலையில் சூரிய தரிசனம் * ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு * சனிக்கிழமையன்று அனுமனுக்கு தீபம்
நல்ல நாள்: மே 19, 20, 21, 22, 25, 26, 30,31, ஜூன் 5, 6, 7, 8, 9 கவன நாள்: மே 15 ஜூன் 10,11,12 சந்திராஷ்டமம். அதிர்ஷ்ட எண்: 3,9 நிறம்: வெள்ளை, மஞ்சள்
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »