மனிதனுக்கு பணத்தின் மீது பேராசை இருக்கிறது. இதை அடையவேண்டும் என்று பலவிதங்களிலும் முயற்சி எடுக்கிறான். எவ்வளவு தான் பணம் வந்தாலும் அந்த ஆசை மட்டும் நிரம்ப மறுக்கிறது. இந்த ஆசையை நிரப்பும் கருவி எது? என்று நபிகள் நாயகம் பதில் சொல்கிறார். “மனிதனுக்கு பணத்தின் மீது பேராசை நிறைந்திருக்கின்றது. அவன் விரும்பிய படி இரு ஓடைகள் நிறைய பொருள் கிடைத்தாலும், அவன் மனம் திருப்தி அடையாது. மூன்றாவதாக இன்னொரு ஓடை நிறைய செல்வம் கிடைக்காதா என ஆசைப்பட்டு அதையும் பெற முயல்கிறான். அப்படி பெற்றாலும் கூட அவன் ஆசை நிரம்பாது. எனவே, மனிதனின் வயிற்றை, மண்ணறையின் (உடல் அடக்கத்திற்காக தோண்டப்படும் குழி) மண் அல்லாமல், வேறு எதனாலும் நிரப்ப முடியாது. எனவே, பேராசையை விட்டு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பேராசை கஞ்சத்தனத்தையும், இரக்கம் இல்லாத தன்மையையும் கற்றுக் கொடுக்கிறது. மனிதனை கொடியவனாக்கும் பாவங்களைச் செய்யவும் அது கற்பிப்பதுடன், கேடான வழிகளிலும் செல்ல ஏதுவாக இருக்கிறது. பாவங்களைச் செய்வதற்கு து?ண்டுகோலாக இருப்பது பேராசையே. செல்வந்தனாக வேண்டும் என்று பேராசை கொள்பவன் நேர்மையை விட்டு விலகி விடுகிறான்,”