சுவாமிமலை அருகிலுள்ள திருக்கூடலூரில் அருளும் வையம் காத்த பெருமாள் பிரயோகச் சக்கரத்துடன் காட்சி தருகிறார். இந்தச் சக்கரம் திரும்பிய நிலையில் இருப்பது விசேஷம். தன் பக்தர்களைக் காக்கும் வகையில் அவர்களுடைய எதிரிகள் மீது பெருமாள் ஏவிய சக்கரம் திரும்பி அவரிடமே வந்த நிலையாம் இது.