கீழப்பாவூர் சுடலைமாடசாமி கோயிலில் சித்திரை இரண்டாவது செவ்வாயன்று கொடை விழா நடைபெறுகிறது. கோயிலில் அடுப்பு மூட்டி பதினைந்து மூட்டை அரிசி உணவாக தயாரிக்கப்படுகிறது. அங்கேயே அவித்த நெல்லை காய வைத்து குத்தி அரிசியாக்கி உணவு படைக்கிறார்கள். விவசாயத்தைப் பெருகச் செய்வதோடு வேண்டிய வரம் தரும் தெய்வமாகவும் விளங்குகிறார், சுடலைமாடசாமி.