திருக்கழுக்குன்றம், தாழக்கோயில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு நவராத்திரி இறுதிநாள், ஆடிப்பூரம், பங்குனி உத்திரம் என வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே முழு அபிஷேகம் நடைபெறுகிறது. மற்ற நாட்களில் அம்பாளின் பாதத்துக்கே அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த அபிஷேகத் தீர்த்தம் கண் நோய்களை நீக்கும் அருமருந்து என்பது பக்தர்களின் நம்பிக்கை.