புதுக்கோட்டை மாவட்டத்தில், மணமேல்குடியிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள வடக்கு புதுக்குடி கிராமத்தில் முருகன் கோயில் ஒன்றுள்ளது. இங்கு நடைபெறும் பங்குனி திருவிழாவில், பத்தாம் நாள் கடலில் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. அன்று படகில் வள்ளி தெய்வானையுடன் 5 கி.மீ. தூரம் கடலில் பவனி வருகிறார் சிவசுப்பிரமணியன்.