திருவண்ணாமலை செஞ்சி சாலையில் உள்ள கீழப்பென்னாத்தூர் அருகேயுள்ளது, வேட்டவலம், அங்குள்ள அருணாசல வசந்தசேன வாணதரய அப்பாசாமி பண்டாரியார் மாளிகைக்கு 1864ம் ஆண்டு தனது 41ம் வயதில் ராமலிங்க அடிகளார் சென்றார். ஜமீன்தாரின் முதல் மனைவிக்கு மகோதரம் என்ற நோயும், இரண்டாவது மனைவிக்கு பிரம்ம ராட்சஷ பேயும் பிடித்திருந்தது. அதை குணமாக்கச் சென்ற வள்ளலாரை, ஓவியமாக வரையச் செய்திருக்கிறார், ஜமீன்தார்.
சென்னையில் பிரபல போட்டோ ஸ்டூடியோ நடத்திய மாசிலாமணி என்பவர் எட்டு முறை வள்ளலாரை படம் எடுத்தும், அவர் உடுத்தியிருந்த வெள்ளாடை மட்டுமே படத்தில் விழுந்ததே தவிர, ராமலிங்க அடிகளாரின் முகம், கை, கால் விழவில்லை. எனவேதான் வேட்டவலம் ஜீமன்தார், வள்ளலாரை ஓவியமாக வரைய விரும்பினார். இந்த ஓவியத்தை கல்கத்தாவில் உள்ள ஹௌரா கிளாஸ்கோ ஃபோட்டோ பிரிண்டிங் கம்பெனி படமெடுத்துக் கொடுத்தது. அந்தப் படத்தைத்தான் இன்று நரை நாம் பயன்படுத்துகிறோம். வழிபடுகிறோம்!