திருமீயச்சூர் லலிதாம்பிகை கோயிலில் சித்ராபவுர்ணமியும் சுவாதி நட்சத்திரமும் ஒன்றாக வரும் நாள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அன்று வானில் இருந்து விழும் மழைத்துளி சிப்பியினுள் நுழைந்தால் அது நல்முத்தாகி விடும் என்று கூறப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும் அந்த நாளில் இத்தல அம்பிகைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.